சுற்று இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணியின் விக்கெட் காப்பாளர் முஷ்பிகூர் ரஹீமின் அதிரடி சதத்தின் உதவியுடன் 247 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பங்களாதேஷ் அணி.
முதலாது போட்டியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி தொடரை கைப்பற்றும் முனைப்புடனும், இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரின் வெற்றி வாய்ப்பை தக்கவைக்கும் நிலையில் இலங்கை அணியும் இன்றைய இரண்டாவது போட்டியில் களமிறங்கின.
இப்போட்டியிலம் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணித் தலைவர் தமிம் இக்பால் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 48.1 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 246 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணியின் நேர்த்தியான பந்து வீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்து கொண்டிருந்தாலும் நிலைத்து நின்று ஆடி சதமடித்ததுடன் இறுதி விக்கெட்டாக ஆட்டமிழந்திருந்தார் முஷ்பிகூர் ரஹீம்.
127 பந்துகளை எதிர்கொண்டு பத்து 4 ஓட்டங்கள் அடங்கலாக 125 ஓட்டங்களை பெற்றமையே பங்களாதேஷ் அணி 200 ஓட்டங்களைக் கடந்து வெற்றி இலக்கை நிர்ணயிக்க முடிந்தது.
இது தவிர மஹ்மதுல்லா 41, லிட்டன் தாஸ் 25 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றிருந்தனர்.
இலங்கை அணி சார்பில் பந்து வீச்சிய ஷமீர மற்றும் சன்டகன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், இசுரு உதான 2 விக்கெட்டுக்களையும், வனின்டு ஹசரங்க ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.
இதையடுத்து 247 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்று முன்னர் வரை 10 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 38 ஓட்டங்களைப் பெற்று ஆடி வருகிறது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரரும் அணித் தலைவருமான குசல் பெரேரா 14 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்துள்ளார்.
குணதிலக 13, நிசங்க 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை